Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மடப்புரம் விலக்கு பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு சசிகுமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |