வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சாமிநாதன் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.