தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கடந்த வாரம் உருவான நிலையில் அதன் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது.
தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி முதல் அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.