கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியமங்கலம் பகுதியில் விவசாயியான பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.