2022- 2023 ஆண்டுக்கான மானிய கோரிக்கையை உயர்கல்வித் துறை சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 27 முக்கிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார்.அதன்படி,
2.அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியர்களுக்கான விடுதி ரூபாய் 49.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
3.பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் ரூபாய் 22. 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
5. சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
10. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் இதன் மூலம் 20,000 இளநிலை முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணாக்கர்கள் பயன்பெறுவர்.
11. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும்.
12. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள் திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்களிக்கப்படும்.
13. மேலும் 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.
15. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் புதிய நூலகக் கட்டணம் ரூ 6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
16.செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணக்கர்களுக்காக முதுகலை வணிகவியல் பாடப்பிரிவு சென்னை மாநிலக்கல்லூரியில் தொடங்கப்படும்.
20. அரசு கல்லூரிகளில் ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்
21.மேலும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்.
22.தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம் மேம்படுத்த ரூபாய் 5 கோடி அரசால் வழங்கப்படும்.
23. 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் மையம் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
24.புத்தாக்கம் மற்றும் புதிய தொழில் நுட்ப திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புரோடோசெம் என்ற 18 வரை புத்தாக்க பாடப்பிரிவு மதுரை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
25.உலக திறன் அகாடமி மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்தி மையம் ரூ10 கோடி மதிப்பீட்டில் 6 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் அமைக்கப்படும்.
26.தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் திறமையை மேம்படுத்த அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆடை வடிவமைப்பு, வேளாண்மை பொறியியல் இயந்திர மின்னணுவியல், தளவாட தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் போன்ற புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.”
27.இதையடுத்து அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளின் ஒருங்கிணைந்து நிர்வகிக்கும் பொருட்டு திட்ட கண்காணிப்பு மையம் ரூபாய் 14.20 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.