மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது.
இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.06) பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் மாறி வரும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.