தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சாக்கு போட்டி, சாப்பிடும் போட்டி, லெமன் வித் ஸ்பூன் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் இது போன்ற போட்டிகளை குழுவாக இணைந்து நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
இருந்தாலும் கிராமப்புறங்களில் கொரோனா விதிகளை பின்பற்றி மிகவும் எளிமையான முறையில் போட்டிகள் நடைபெற்றது. எனினும் பெண்களுக்கு பீடி குடிக்கும் போட்டி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 பெண்களை வரிசையாக நிற்க வைத்து வேகமாக பீடி புகைக்கும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. புகை உடல் நலத்திற்கு கேடு தரும் என்று பொது இடங்களில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், பெண்களுக்கு இதுபோன்ற போட்டி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியை தமிழகத்தில் நடத்தப்பட்டிருந்தாலும் எங்கு என்ற விபரம் இதுவரை சரியாக தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருவதால் பல தரப்பினர் இதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.