சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை மிலிட்டரி காலனி 17-வது தெருவில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய தேவராஜ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சாந்தகுமார் படிப்பு முக்கியமா? விளையாட்டு முக்கியமா? என கூறி மகனை திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சாந்தகுமார் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தந்தை திட்டியதை நினைத்து மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
இதனையடுத்து மகன் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் தேவராஜின் தாயார் கதவை தட்டியுள்ளார். அதன் பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து அவர் கதறி அழுதுள்ளார். அதன்பின் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.