Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் காலமானார் – சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்(89) காலமானார். ரத்த தொற்றுநோய் காரணமாக கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் 2014 ஆண்டுகளில் செயல்பட்டவர். உத்தரப்பிரதேசத்தில் இவர் முதல்வராக இருந்த காலத்தில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

Categories

Tech |