Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு….. வெளுத்து வாங்கிய மழை….. 4 பேர் உயிரிழப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் சர்க்கேட் கிராமத்தில் இன்று அதிகாலை 2:40 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த மழை அங்கு கொட்டி தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமங்களில் தவித்து வந்த மக்களை மீட்டனர். சிலர் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. 10 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அதிகாரிகள் தேடி வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |