தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் விதி 110-ன்கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்ற ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Categories
உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு …!!!
