Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையான தர்மயுத்தம் துவங்குகிறது… டிடிவி தினகரன் அறிவிப்பால் பரபரப்பு…!!!

தமிழகத்தின் உண்மையான தர்மயுத்தம் இப்போது தான் தொடங்குகிறது என டிடிவி தினகரன் அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் உண்மையான தர்மயுத்தம் இப்போது தான் தொடங்குகிறது என அவர் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிடிவி தினகரன் எந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Categories

Tech |