அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமகவின் தொழிற்சங்க கொடியை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், அண்ணா இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நிதி கிடைத்திருக்காது. அண்ணா உருவாக்கிய சமுதாய புரட்சியால் தான் தமிழகத்தில் சாமானியர்களும் முதல்வராக முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தாயுள்ளதோடு இருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். 1934 ஆம் ஆண்டு அண்ணாவும், தந்தை பெரியாரும் முதல்முறையாக சந்தித்த மண் தான் இந்த திருப்பூர். நாகரீகமான அரசியலுக்கு சொந்தக்காரர் அண்ணா. அவர் உருவாக்கிய தம்பிகள் தான் இன்றைக்கு வரை திராவிட இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். அண்ணாவின் கொள்கைகளை சாதாரண மக்களுக்கும், பட்டி தொட்டிக்கும் எடுத்துச் சென்ற பெருமை எம்ஜிஆரை சாரும்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவை இழுத்து மூட்டி விட்டு வர வேண்டிய இடத்துக்கு வந்து விடுவார். திமுக ஆட்சி கவிழ மின்கட்டணம் போதும். தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.கோபாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மின்கட்டண உயர்வால் சாதாரண மக்களில் இருந்து, தொழிலாளர்கள் என அனைவரும் இன்றைக்கு பாதிக்கப்படுகிறார்கள். சொத்து வரி, மின்கட்டண உயர் இப்படி மக்களை ஏமாற்றுவதுதான் திராவிடம் மாடலா. ஹிட்லரை தாண்டி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். பல்வேறு திட்டங்களை முடக்கிவிட்டது. கருணாநிதியும் மிஞ்சிவிட்டார் மு.க. ஸ்டாலின், அவர்களது குடும்பம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையில் திரையுலகில் அனைத்து படங்களையும் ஏஜென்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது. மேடையில் குழந்தை போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர். பழனிச்சாமி, என்று எப்படி இருக்கிறார்? ஆர்.கே. நகர் தேர்தலில் எனக்கு வாக்கு சேகரித்த பழனிச்சாமி அடுத்த இரண்டு மாதத்தில் நீ யார் என்று என்னை கேட்கிறார். எடப்பாடி நகராட்சியில் கூட பழனிச்சாமையில் ஜெயிக்க முடியவில்லை.
இதனையடுத்து ஸ்டாலினை பார்க்க அதிமுகவில் கும்பல் ஒன்று முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நான் வேண்டுமானால் புகைப்படம் ஆதாரத்துடன் சொல்லுவேன். கடந்த ஆட்சிக்காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன் திருந்தவில்லை, இப்போது அனுபவிக்கிறார்கள். மக்கள் எங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமையாமல் இருக்க காரணம் 100% எடப்பாடி பழனிச்சாமி தான். கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் அதிமுக உள்ளது. இன்றைக்கு அதிமுக வட்டார கட்சியாக சுருங்கி விட்டது. மக்களின் பல ஆயிரம் கோடி வரிப்பணத்தை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விடாது. தப்பு செய்தவர்கள், துரோகம் செய்தவர்கள் நன்மை கண்டு பயப்படுகிறார்கள். எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தோம். இன்றைக்கு ரெய்டு நடக்கிறது. நாங்கள் அதை பார்த்து சந்தோஷம் அடையவில்லை, நீங்கள் பழைய நண்பர்கள். இனியாவது திருந்துங்கள், பணம் மட்டும் போதாது உண்மையை உணர்ந்து யதார்த்தத்திற்கு வாருங்கள். ஒரு தாய் மக்களாக இருந்தோம் இன்றைக்கு தனியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.