சென்னையில் உணவுப் பொருள்கள் மீதான புகாரை மக்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுகளில் கலப்படம்,காலாவதியான உணவு பொருட்கள் உட்பட உணவுப் பொருட்கள் சம்பந்தமான புகாரை மக்கள் இனி நேரடியாக தெரிவிக்கலாம். அதற்கு பிரத்தியேகமான வாட்ஸ்அப் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் பெண்ணுக்கு குரல் பதிவு மூலம், படங்கள் மற்றும் வீடியோ மூலமாக தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனுடைய விபரங்கள் உடனுக்குடன் புகார்தாரர் தெரிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே இனி பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் உணவு கலப்படம் குறித்து அரசுக்கு புகார் அளிக்கலாம்.
Categories
உணவுப் பொருட்கள் மீதான புகார்…. உடனே இந்த எண்ணுக்கு whatsapp பண்ணுங்க…. அரசு அறிவிப்பு….!!!!
