மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே பரசேரி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.