Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் வேதனை… ரிக் வண்டி டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நலக்குறைவால் மனமுடைந்த ரிக் வண்டி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வால்நாயக்கன்பாளையம் அருந்ததியர் காலனியில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி டிரைவரான இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கருணாநிதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த கருணாநிதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கருணாநிதியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருணாநிதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சுப்புலட்சுமி நல்லூர் காவல்துறையினர் கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |