Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடலில் மின்சாரம் பாய்ச்சி…. தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகரில் முத்துகுமரகுரு(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா(42) என்ற மனைவியும், குரு சஞ்சனா(18), குரு அவந்திகா(14) என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் முத்துகுமரகுரு வங்காளதேசத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்காக வந்த முத்துக்குமரகுரு வீடு மற்றும் நகைகளை விற்று வேறு இடத்தில் புதிதாக வீடு மற்றும் கார் வாங்கலாம் என தெரிவித்துள்ளார். அப்போது மகள்களின் படிப்பு மற்றும் திருமண செலவுகள் இருப்பதால் தற்போது அதனை பற்றி யோசிக்க வேண்டாம் பிறகு பார்த்து கொள்ளலாம் என லலிதா கூறியுள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு லலிதா மற்றும் மகள்கள் முத்துக்குமரகுருவிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குமரகுரு தனது கைகளில் மின்சார தாமிர வயர்களை சுற்றி அதனை மின் இணைப்பில் பொருத்தி மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துகுமரகுருவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |