Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடலில் நெருப்புடன் ஓடி வந்த பெண்…. “மகளின் சாவில் மர்மம் இருக்கிறது” கதறும் தாய்….!!

கணவன் சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள பால்நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் நாகம்மாள். இவருக்கு திவ்யபாரதி என்ற ஒரு மகள் இருக்கிறார் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சேட்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர் இதற்கிடையே திவ்யபாரதி அவரது தாய் வீட்டில் இருந்து பணம் நகை வாங்கி வருமாறு கேட்டு அவரது கணவர் சேட்டு, அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது அதன் பின் திவ்ய பாரதி தனது உடலில் தீப்பிடித்து வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திவ்ய பாரதி அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதி யின் தாயார் நாகம்மாள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரில், ” என்னுடைய மகளை பணம் நகையை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். எனது மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |