Categories
மாநில செய்திகள்

உடனே நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி 48,84,726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, அவர்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிகளை சான்றிதழை வழங்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தை செயல்படுத்தும்படி குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |