உடனடியாக அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் இவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது.
ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக 6 மாதம் அரசு இல்லத்தில் தங்க அனுமதிக்கு வேண்டும் என கூறி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா அரசு இல்லத்தை 6 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.