Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி  தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில் இந்தி மொழி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்ற நுழைவு  தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில்  ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், ரவி, வசந்தி, பழனிவேல், முக்குடி ஊராட்சி தலைவர் முத்தையா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து ராமலிங்கபூபதி, கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், நாகரத்தினம், போஸ், பாஸ்கரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |