Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. பெற்ற மகளை கொலை செய்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!!!

மகளை கொலை செய்த பெற்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் கடந்த 18-ஆம் தேதி சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 25 வயது இளம்பெண்ணின் உடலில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பாதர்பூர் நகரில் நித்தேஷ் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயுஷி  சவுத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இதனையடுத்து   ஆயுஷி சவுத்ரி கல்லூரி   படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது பெற்றோரிடம் எதுவும் கூறாமல் சில நாட்கள் வெளியே தங்கியுள்ளார். மேலும் சத்ரபால் என்ற வேறு  ஜாதி வாலிபரை தனது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நித்தேஷ் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தனது மகளை சுட்டுள்ளார். மேலும் அவரின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து மதுரா நகரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  அவரது  சகோதரர் மற்றும் தாயார் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அவரின் முகம் மற்றும் தலையில் ரத்தம்  இருந்துள்ளது. இந்நிலையில்  போலீசார் நித்தேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |