Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. பெற்ற மகளை மிரட்டி தந்தை செய்த காரியம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

கேரளாவைச் சேர்ந்த ரப்பர் தொழிலாளிக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 12 வயது பெற்ற மகளை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் இது தொடர்பாக யாரிடம் அச்சிறுமி கூறவில்லை. இதனிடையில் சென்ற 2017 ஆம் வருடத்தில் சிறுமி கர்ப்பமடைந்ததால் அவருடைய குடும்பதினருக்கு தெரியவந்துள்ளது. எனினும் ஆரம்பத்தில் அவரது தாயார் மற்றும் காவல்துறையினர் கேட்டபோதும் குற்றவாளி யார் என்பதை சிறுமி சொல்லவில்லை. இதனையடுத்து குழந்தைகள் நல மையத்திற்கு (CWC) ஆலோசனைக்காக அனுப்பப்பட்ட சூழ்நிலையில், அந்த சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதாவது “தான் அப்போது 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும், ​​தன் தாய் வீட்டில் இல்லாதபோது ​​சென்ற 2 வருடங்களாக என் தந்தை தான் தன்னை பலாத்காரம் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என தன் தந்தை கூறியதாகவும், இல்லையெனில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்வார்கள் என மிரட்டியதையும்” அச்சிறுமி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

அதன்பின் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இவ்வழக்கு கேரளாவிலுள்ள விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார், பெற்ற மகளை மிரட்டி பல்வேறு முறை பாலத்காரம் செய்த தொழிலாளிக்கு 106 ஆண்டு சிறைதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். அத்துடன் தொழிலாளிக்கு மொத்தம் ரூபாய் 17 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Categories

Tech |