புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (30). இவருக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். மது பழக்கம் காரணமாக ஏற்பட்ட தகராறால் சரவணின் மனைவி சில மாதங்களாக கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, சரவணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தனது பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் நக கீறல் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் தந்தை சரவணன் இரவில் தங்களிடம் தவறாக நடக்க முயல்வதாக தெரிவித்துள்ளனர். இதில் அதி்ர்ச்சியடைந்த சரவணனின் மனைவி இது குறித்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.