Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட அதிர்ச்சி…! தேயிலை தோட்டத்தில் வைத்து…. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை….!!!

கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய 15 வயது மகளுடன் சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்து வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் பூபாரம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அந்த சிறுமியின் உடைய நண்பனும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் தான். அவரும் இதுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமியும் அவருடைய நண்பரும் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் சிறுமியின் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் நண்பர் கூச்சலிட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்து விட்டு தப்பி சென்றவர்கள் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தப்பியோடிய நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரில் இரண்டு பேர் சிறுவர்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |