எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய மதிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய, சீன எல்லை பகுதியிலிருந்து 5 படைகளை திரும்பப்பெற சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக எல்லை பகுதிகளில் 40,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதி ஒப்பந்தத்தை மதிப்பதாக இந்தியா உறுதி கொண்டுள்ளது என அறிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இரு நாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறும் விதமாக சீனா, எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை குவித்துவருகிறது. நியாயமற்ற கருத்துகளை தெரிவிக்கும் வகையில் மாற்றம் தெரிகிறது. அமைதியை நிலைநாட்ட போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மதிப்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்திய-சீன நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ராஜாங்க, ராணுவ ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது” என்றார்.