தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருச்சேறை என்ற இடத்தில் சாரபரமேஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர் உடையவர் என்று இறைவனுக்கு வேறு பெயர்களும் உண்டு. இறைவியின் பெயர் ஞானாம்பிகையாகும். இந்த கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும் அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னதியும் ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் இருக்கிறது. விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் அழைப்பர்.
மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலப்பக்கத்தில் சிவபெருமான் பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் இருக்கிறது. அடுத்துள்ள ராஜகோபுரத்தை தாண்டியதும் சிறப்பு மண்டபம், மகா மண்டபம் உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக இந்த திருச்சேறை விளங்குகிறது.
இந்த கோவிலில் 3 தீர்த்தங்கள் உள்ளது முதல் தீர்த்தம் பிந்து சுதா தீர்த்தம், கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமிர்தத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. 2-வது ஞான தீர்த்தம். இது கோவிலின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். 3-வது தீர்த்தமாக மார்க்கண்டேய தீர்த்தம் விளங்குகிறது. இது கோவிலின் தெப்பக் குளம் ஆகும். கருவரை தேவ கோட்டத்திலும் பிரகாரத்தில் விநாயகர், ஜீரஹர லிங்கேஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, சப்தகன்னிகள், சமயக்குரவர்கள், பால சுப்பிரமணியர், மகாலட்சுமி வாயுலிங்கம், ஜேஷ்டாதேவி, சூரியன், சண்டிகேஸ்வரர், நந்தியர் நாகர்கள். மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் கூறியவரும், குந்தி தேவிக்கு உபதேசம் செய்த வருமான தவறிய மகரிஷி இல்லத்தில் மோட்சம் பெற்றதாக இதற்கு வரலாறு இருக்கிறது.