மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முழு அதிகாரத்தையும் அதிகாரிகளுக்கு கடந்த 2002- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உரிமைச் சட்டம் அளிக்கிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலங்களை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில் சாலைகளில் அமைக்கப்படும் கடைகள் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருப்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்காணிப்பு பிரிவுகள் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்துவதை தடுக்க தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ அமைக்கப்பட்டு இருக்கும் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து மேலாண்மைக்கும், எதிர்கால சாலை திட்டங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.