இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. விலைவாசி ஏற்றம் பல மணி நேர மின்வெட்டு என இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டனர். இந்நிலையில் சீனாவிடம் கடன் பெற்ற இலங்கை அரசு அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவிக்கிறது.
இந்திய அரசு இலங்கைக்கு எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் நிதி உதவி என முடிந்தவரை உதவி செய்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு கூடுதலாக உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர் பிரதமர் மோடியால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு எங்களுக்கு உதவுங்கள் என கூறியுள்ளார். அதோடு இலங்கை எங்களுடைய தாய் நாடு எங்கள் தாய் நாட்டை நாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.