ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளங்களில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 43 வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் ரஷ்ய தூதரகத்தில் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சமீபத்தில் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கிவ் பகுதியில் 410 பொது மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ரத்தத்தை குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் சில பெண்கள் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது போரில் மக்கள் கொல்லப்பட்டதை நினைவு படுத்தும் வகையில் இறந்து கிடப்பது போல் நடித்து ரஷ்யாவிற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.