உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இது பற்றிய ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி ,உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில்மார்ச் 8-ந் தேதி அதிகாலை வரை 474 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 97 பேர், பெண்கள்-58 பேர், சிறுவர்கள்-8 பேர், சிறுமிகள்-8 பேர், 17 குழந்தைகள், 294 நபர்களின் பாலினம் தெரியவில்லை.ரஷியா தாக்குதலில் 861 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஆண்கள்-76 பேர், பெண்கள்-55 பேர், சிறுவர்கள்- 3 பேர், சிறுமிகள்-11, 30 குழந்தைகள், 686 நபர்களின் பாலினம் தெரியவில்லை. பெரும்பாலான பொதுமக்கள் பீரங்கி தாக்குதல், ராக்கெட் வீச்சுகள், விமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸில் 96 பேரும், உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் 378 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.இந்நிலையில் போர் நடக்கும் இடங்களில் இருந்து தகவல்கள் வர தாமதமாவதால், உண்மையான உயிரிழப்புகள் மிக அதிகமாகவே இருக்கலாம் என ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.