உக்ரைனுக்கு பத்தாயிரம் கோடி அவசர உதவியாக வழங்குவதற்கு சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுபற்றி கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா “போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பி இருக்கிறோம்.
உக்ரைன் மீதான விவாதத்தை ‘சீர்திருத்தங்கள்’ என்பதில் இருந்து ‘நெருக்கடி மேலாண்மை’ என மாற்றி அமைத்துள்ளோம் என கூறியிருந்தார்.இந்நிலையில் ரஷிய படைகளின் படையெடுப்பில் சிக்கியுள்ள உக்ரைனுக்கு 140 கோடி டாலர் நிதியுதவி வழங்க சர்வதேச நிதியத்தின் செயற்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. அவசர தேவைகளை பூர்த்தி செய்யவும்,போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் இந்த நிதி அளிக்கப்படுவதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.