ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரைவுபடுத்தும் மசோதாவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரிவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் ஆயுதங்கள், பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராணுவ டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சக்தி வாய்ந்த மேற்கத்திய ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
மேலும் புதினின் மிருகத்தனமான போருக்கு எதிராக தங்கள் நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் உக்ரேனியர்களின் போராட்டத்தை அமெரிக்கா ஆதரித்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடன் குத்தகை சட்டம் உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை துரிதப்படுத்த அரசாங்கத்தை அனுமதி அளிக்கிறது.
உக்ரைனை ஆதரிப்பதற்காக கூடுதலாக 33 பில்லியன் டாலர்கள் நீதிக்கான கோரிக்கையை ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். மேலும் இந்த முக்கியமான போர் முயற்சியில் நான் தாமதிக்க முடியாது என்பதனால் தற்ப்போதைக்கு கொரோனா பேரிடருக்கான நிதி கோரிக்கைகளை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரண்டாம் உலகப்போரில் அடைந்ததைப் போல உக்ரைன் போரில் வெற்றி நமதே எனவும் உக்ரைன் மேற்கத்திய நாசிச படைகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக குறை கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அவர் மாஸ்கோவில் ரஷ்ய ராணுவத்தின் மாபெரும் அணிவகுப்பை பார்வையிட்டு இருக்கின்றார். இந்த செயல்கள் காரணமாகவே அமெரிக்க பதிலடி தரும் விதமாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்து இருப்பதாக தெரிகின்றது. மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதனை வரவேற்று இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டுவிட்டரில் கடன் குத்தகை தொடர்பான சட்டத்தில் இன்று கையெழுத்திட்டது ஒரு வரலாற்றுப் படியாகும்.
மீண்டும் இணைந்து வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். மேலும் 77 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பது போல உக்ரைனில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என கூறியுள்ளார்.