Categories
மாநில செய்திகள்

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ஐ பிரதமர் மோடி சேர்த்து வைக்கப் போகிறாரா…? வெளியான புதிய தகவலால் திடீர் எதிர்பார்ப்பு…!!!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்  பிரதமரை சந்திப்பதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான அதிமுக  நிர்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மாறி மாறி கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்கி உத்தரவு பிறப்பிப்பதால் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகிறார். இவர் தனி விமானம் மூலம் ஜூலை 27-ஆம் தேதி சென்னைக்கு வந்து செஸ் ஒலிம்பியார் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ,ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன்பின் மறுநாள் சென்னை திரும்பும் பிரதமர்  மாலை 6:00 மணி அளவில் நடைபெறும் செஸ் போட்டியை தொடங்கி வைப்பார். இந்த இடைப்பட்ட நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான சில பிரமுகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸும் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சமாதானப் படுத்தியது பிரதமர்தான். எனவே மீண்டும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி சேர்த்து வைப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாஜக தரப்பிலிருந்து எந்த ஒரு வாழ்த்தும் தெரிவிக்கப்படாத நிலையி,ல் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிந்ததை பிரதமர் மோடி விரும்பவில்லை என்பது தெரிகிறது.

Categories

Tech |