Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி49 ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது… கைத்தட்டி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி…!!!

பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் மூலமாக இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 9 செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்ந்தன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த வருடம் இஸ்ரோ சார்பாக விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் இதுதான். இந்த ராக்கெட் மூலமாக பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவிற்கு சொந்தமான இஓஎஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் வணிகரீதியில் தயாரிக்கப்பட்ட 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்பிறகு ராக்கெட்டிலிருந்து செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக பிரிந்து சென்றன. அந்த செயற்கைக் கோள்கள் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்ணியல் ஆய்வு மையத்திலிருந்து விஞ்ஞானிகள் அனைவரும் கண்காணித்து வந்தனர். செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட தால் விஞ்ஞானிகள் அனைவரும் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதுமட்டுமன்றி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்தத் திட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |