இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் பல வருடங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இச்சூழ்நிலையில் சமீபகாலமாக பாலஸ்தீனத்தைசேர்ந்த பயங்கரவாதிகள், இஸ்ரேலில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்க இஸ்ரேல் ராணுவமானது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியிலுள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இஸ்ரேல் பாதுகாப்புபடை வீரர்கள் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் வீரர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசிஎறிந்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முகமது மரேய் என்ற 25 வயது பாலஸ்தீன பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அத்துடன் 2பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.