தலிபான் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்டீ முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் மகளை திருமணம் செய்து இருக்கின்றார். ஆனால் தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்து இருக்கின்றார். இது பற்றி அவரது மனைவி எலாஹா(24) வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் காபுல் மருத்துவமனை பல்கலை கழகத்தில் படித்து வந்த எலாஹா,சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் அவர் தலிபான் புலனாய்வு தலைமையகத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளது. எலாஹா ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படைகளின் படங்களை தனது தொலைபேசியில் வைத்திருந்ததால் தலிபான் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
இந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்தபோது அவர் அவமானப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் வீடியோ எடுக்கப்பட்டார். தலிபான் தலைவர் சயீத் கோஸ்டி தினமும் என்னை சித்திரவதை செய்து வந்தார். மேலும் இரவில் என்னை பலாத்காரம் செய்தார். இதை என் கடைசி வார்த்தைகளாக இருக்கலாம் ஏனென்றால் அவர் என்னை கொன்றுவிடுவார். அதனால் ஒவ்வொரு நாளும் சித்திரவதைகளை அனுபவித்து இறப்பதை விட ஒரு முறை இறப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எலாஹா தவிர்க்க முடியாமல் சயீத் கோஸ்டியை தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் காபுலில் உள்ள குல்பஹர் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார். அவர் பலமுறை தப்பிக்க முயற்சி செய்த போதிலும் அவரால் தப்பிக்க முடியவில்லை. இந்த நிலையில் இறுதியாக ஒரு ஸ்மார்ட் போனை பெற்று தனது வீடியோவை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதில் இருந்து அங்கு பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறது.