Categories
தேசிய செய்திகள்

இவை அனைத்தையும் அகற்ற மத்திய அரசு முடிவு…. மந்திரி கிரண் ரிஜிஜு வெளியிட்ட தகவல்….!!!!

காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவுசெய்து இருக்கிறோம் என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது தொடர்பாக மந்திரி கிரண் ரிஜிஜு ஷில்லாங்கில் கூறியதாவது “சில பழைய சட்டங்கள் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக செயல்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் மீதான இணக்க சுமையை நாம் குறைக்கவேண்டும். சாமானிய மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆட்சி இருக்கவேண்டும் எனவும் பிரதமர் மோடி விரும்புகிறார்.

தேவையற்ற சட்டங்கள் சாமானியர்களுக்கு சுமையாக உள்ளதால் குறைக்கப்படவேண்டும். முன்பே 1500-க்கும் அதிகமான சட்டங்களை நீக்கி இருக்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் எந்தப் பொருத்தமும் இன்றி விளங்கும் சில காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |