தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். மேலும் வருகின்ற 26 -ஆம் தேதி காலை 9:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
அப்போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்த அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிப்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் புதிய சட்டம் மசோதாக்களை தாக்கல் செய்வது குறித்தும், ரம்மி உள்ளிட்ட ஆன்லைனில் விளையாட்டுகளுக்கு தடை செய்வது குறித்த மசோதாவை நிறைவேற்றுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.