நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் ஏழை மக்கள், வியாபாரிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட், தற்போது மத்திய பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்து வருவதை அறிந்து உடனடியாக 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்துள்ளார்.