Categories
அரசியல்

இவர் பெண் விரோத மனநிலையின் சாம்பியன்…. பிரியங்கா கடும் விளாசல்…!!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண் விரோதம் அணி சாம்பியன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வருடம் கடந்துவிட்டது நினைவுகூர்ந்து டுவீட் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஒரு வருடத்திற்கு முன்பே இந்த தினத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக உத்தரப்பிரதேச அரசு அவர்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்தது.

தனது மகளுக்கு இறுதிச் சடங்கை கூட நடத்த அவருடைய குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் குறித்து இவ்வளவு கொடூரமான செயலை கொண்ட ஒரு முதல்வர் எப்படி பெண்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியும்? இவர் பெண் விரோத மனநிலையில் சாம்பியன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |