உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது டொனேட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பகுதிகளில் உள்ள கிளர்ச்சி படைகளுக்கு உக்ரைன் பணிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க தயாரிப்பு javalin மற்றும் stinger மிசேல் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் என்ற கோரிக்கையை ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி முன்வைத்துள்ளார். சர்ச்சையின் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் ரஷிய படைகளுக்கு ஆதரவாக உக்ரைன் படைகளுடன் போரிட தயாராக இருப்பதாகவும் செர்ஜி தெரிவித்துள்ளார்.