Categories
உலகசெய்திகள்

இவர்களை பத்திரமாக மீட்டாச்சு…. 3 மாதமாக அவதிப்பட்டுள்ள இந்தியர்கள்… தகவல் வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக இருந்த 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் கொடி பொருந்திய RwaBee என்ற சரக்கு கப்பலில் 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளார்கள். அப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவர்களை கடத்தி சென்று மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக வைத்துள்ளார்கள்.

இதனையடுத்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அவர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சரான Badr தெரிவித்துள்ளார். இவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு மஸ்கெட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |