இந்திய நாட்டில் வருமான வரி, ஜிஎஸ்டி, தொழில்வரி என அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு வரிகள் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகிறது. அதன்படி நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி சுங்க வரி கட்டணம் ஆகும். தற்போது உள்ள சூழலில் மக்கள் தங்கள் வானங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவது மிக பெரிய சிரமமாக உள்ள நிலையில் சுங்க கட்டண வரையும் அதிகரித்து வசூலிக்கப்படுவதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுங்க கட்டணம் விதிப்பதால் நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிமுறைகள் 2009 இன் படி தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகம் இல்லா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு மட்டும் சுங்க சாவடிகளில் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்துவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி நடப்பு நீதியாண்டில் இக்கட்டணம் ரூ.315 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.