Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இனி நகைக்கடன் வழங்கக்கூடாது…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தங்க நகை கடன் வழங்கி வருகின்றன. கூட்டுறவு வங்கியில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் வங்கிகளை விட கூட்டுறவு நிறுவனங்கள் குறைந்த வட்டி வசூலிக்கப்படும். அதனால் நகை கடன் வாங்க பலரும் வருகின்றனர்.

இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை வெளியில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாக புகார் வந்துள்ளது. இதற்கு அதிகாரிகள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையடுத்து கூட்டுறவு நிறுவனங்கள் அடகுக்கடை நடத்துபவர்களுக்கு  கடன்கள் வழங்கக்கூடாது என்றும் அதை  மீறி வழங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |