செர்பியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரை ஹனிடிராப் மோசடியில் சிக்க வைப்பதற்காக சிலர் திட்டம் திட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
செர்பியாவை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் பிரபலமான டென்னிஸ் வீரர் அவர். மேலும் டென்னிஸ் போட்டிகளின் உலக தரவரிசையில் 15 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் மீது பொறாமை கொண்ட சிலர் நோவக் ஜோகோவிக் மீது ஹனிடிராப் மோசடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக அதே பகுதியை சேர்ந்த பிரபல மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசக் என்பவரை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்தவகையில் நடாலிஜாவை சந்தித்த நபர் ஒருவர் “நோவக் ஜோகோவிச்சிடம் நாடகமாடி அவரை மயக்கி தங்களுடைய வலையில் விழ வைக்க வேண்டும், மேலும் அவருக்கு தெரியாமல் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று அந்தரங்க புகைப்படங்களை எடுத்து அதனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், இதனை நீங்கள் சரியாக செய்தால் ரூ. 50 லட்சம் தருகிறேன்” என்று அவரிடம் விலை பேசியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி, “நோவக் ஜோகோவிச் நல்ல மனிதரும் சிறந்த விளையாட்டு வீரரும் ஆவர், அவருக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது, நான் மட்டுமல்ல எந்த ஒரு பொண்ணும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டாள்” என்று கூறி அந்த நபரை திருப்பி அனுப்பியதாக தகவல் தெரிவித்துள்ளார்.