இளவரசர் ஹரி கவனமாக தனது கருத்துக்களை வெளியிட வேண்டும் என ராஜ குடும்பம் சார்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் அரச குடும்பத்திற்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார். இதுகுறித்து ராஜா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியதாவது. தனது அனுபவங்கள் தொடர்பில் உண்மையை உடைத்து பேச இளவரசர் ஹரிக்கு எல்லா உரிமையும் இருக்கு. மேலும் ராஜ குடும்பத்தை நடுங்க வைத்த ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சி உண்மையில் மோகன் மெர்க்கல் முன்னெடுத்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் மோகன் மெர்க்கலுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பக்க தரவுகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மோகன் மெர்க்கல் வெளிப்படுத்திய சம்பவங்களால் இளவரசர் ஹரி கூறிய நிகழ்வுகள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் இளவரசர் ஹரி கவனமுடன் அடுத்த நகர்வுகளை முன்னெடுக்காமல் போனால் அது அவருக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.
இந்நிலையில் தனது எண்ண ஓட்டங்களையும், அனுபவங்களையும் வெளிப்படுத்த இளவரசர் ஹரிக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதில் கவனமும், நிதானமும் தேவை. ஏனென்றால் ஹரி பல உண்மைகளை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே கண்டிப்பாக அந்த புத்தகம் பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். மேலும் ஹரி எப்போதாவது அரச வாழ்க்கைக்கு திரும்ப விரும்பினால் அவர் வெளியீடும் கருத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நெருப்பு வைக்கப்பட்ட பாலம் ஒருபோதும் கரையை கடக்க உதவாது என அவர் ஹரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.