சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்காடு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்துள்ளது.
இருவரும் இணைந்து அப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரியப்பன் மற்றும் மகாராஜனை கைது செய்தனர்.அதோடு அவர்களிடம் இருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.