பிரபல படங்கள் பலவற்றையும் இயக்கிய சுசி கணேசன் தற்போது “வஞ்சம் தீர்த்தாயடா” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 1980-களில் மதுரையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வி என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. அதேபோல் இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி இளையராஜா எப்படி சுசி கணேசன் படத்திற்கு இசையமைக்கலாம் ? என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருடைய படத்தில் இசையமைக்கிறோம் என்பது ராஜா சாருக்கோ அல்லது அவருடைய குழுவினருக்கோ தெரியாதா ? என்று கேட்டு டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.