Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்….. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

வாலிபருக்கு 12 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளன்குழியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தியாகராஜன் (27).  கடந்த 2016-ஆம் ஆண்டு தியாகராஜன்  19 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை மகிளா நீதிமன்றம் தியாகராஜனுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம், 12 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |